சென்னை: சென்னை சிட்லபாக்கத்தில் மின் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் சோபியா தலைமையில் நடைபெற்று வரும் ஆய்வில் போலீசாரும் பங்கேற்றுள்ளனர். லாரி மோதி மின்கம்பம் சாய்ந்ததே விபத்துக்கு காரணம் என மின்துறை அமைச்சர் தங்கமணி கூறிய நிலையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.