சென்னை: பலகட்சி ஜனநாயகம் தோற்றுவிட்டதாக உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற கருத்தை அமித்ஷா கூறியிருக்கிறார் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்ததாக மீண்டும் அமித்ஷா கூறியுள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகும். பொருளாதார மந்தநிலை காரணமாக மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.