×

திருவில்லிபுத்தூரில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி சாரை பாம்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் நெசவாளர் காலனி தெருவைச் சேர்ந்தவர் காளிராஜ் (48). நெசவுத் தொழிலாளி. நேற்று 4 மணி அளவில், இவரது வீட்டில் புதர்பகுதியில் இருந்து வந்த பாம்பு ஒன்று புகுந்தது. வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், வீட்டில் இருந்த பழைய பொருட்கள் வைத்திருந்த இடத்தில் பதுங்கிக் கொண்டது. இதைப் பார்த்த காளிராஜ் திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு துறை அதிகாரி ஜெயராஜ் தலைமையில் தீயணைப்பு துறையினர் வீட்டுக்கு வந்து, போக்கு காட்டிய பாம்பை, ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்பு பிடித்தனர். பிடிபட்ட பாம்பு 6 அடி நீளமுள்ள சாரையாகும். பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர் ஊர் ஒதுக்குப்புறத்தில் பாம்பை விட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

Tags : house ,Thirvilliputtur , Thirvilliputtur, snake
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்