சேலம்: சேலத்தில் காலி மனைகளை சுத்தம் செய்யாவிடில் மாநகராட்சியே சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காலம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், நோய் தோற்று உள்ளிட்டவை ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. அதேபோல, நகர்ப்புறங்களில் சுகாதார பணிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமார் 750 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் நேரடி ஆய்வுக்கு செல்லும் பகுதிகளில் அமைந்துள்ள காலி வீட்டுமனைகளில் உள்ள குப்பைகள், முட்புதர்களை அகற்றி நோய் தோற்று ஏற்படாமல் இருப்பதற்கு சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முறை அறிவுறுத்தப்பட்டது.