×

பள்ளிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க உத்தரவு

சென்னை: பள்ளிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அரசு சாரா நிறுவனங்களுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. காலதாதமின்றி அனுமதி வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளது. சுகாதாரம், கல்வி பணிகளை செய்ய விரும்பும் என்.ஜி.ஓ.க்களுக்கு அனுமதி வழங்க தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.


Tags : NGOs ,schools ,Primary Education Officers , School Education, Schools, Development Services, NGOs, Primary Education Officers
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...