திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 2 லாரிகளில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெசல் கிராமத்தில் வாகன சோதனையின் போது 25,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடக பதிவு எண் கொண்ட ஒரு டேங்கர் லாரி மற்றும் சரக்கு வாகனத்தை போலீஸ் மடக்கிய போது எரிசாராயம் பிடிப்பட்டது. சரக்கு வாகனத்தில் 500 கேன்களில் எரிசாராயத்தை கடத்திய ஓட்டுநர் உட்பட 4 பேர் தப்பியோடியுள்ளனர்.