புதுடெல்லி: தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) 2018-19ம் நிதியாண்டிற்கு வட்டி விகிதம் 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 6 கோடி பேர் பயனடைவார்கள் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎப்ஓ) மத்திய அறங்காவலர்கள் வாரியத்தின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடந்த நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.65 சதவீதமாக நிர்ணயம் செயயப்பட்டது. இந்த முடிவு மத்திய நிதியமைச்சக்த்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.