சென்னை: சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 170வது வார்டு செட்டித்தோட்டம் பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக கூறி மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கணக்கெடுக்கும் பணிக்காக அரசு அதிகாரிகள் வருகை தந்தனர். அப்போது அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்திக்க வேண்டும் என தொலைபேசியில் தெரிவித்தனர்.
இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் உடனடியாக நேரில் சென்று செட்டித்தோட்டம் பகுதி வருகை தந்து அப்பகுதி மக்களிடம் பிரச்னையை கேட்டறிந்தார்.