ஆலந்தூர்: மேற்கு வேளச்சேரி கக்கன் நகரில் பாழடைந்து கிடக்கும் சிறுவர் விளையாட்டு பூங்காவை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு வேளச்சேரி 177வது வார்டுக்கு உட்பட்ட கக்கன் நகர் 3வது குறுக்கு தெருவில் பாழடைந்த கழிப்பிடம் இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த கழிப்பிடத்தினை இடித்துவிட்டு பூங்கா அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தது குறித்து தினகரன் நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து கழிப்பிட கட்டிடம் இடிக்கப்பட்டு அங்கு சிறுவர் விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட்டது. ஆனால் பூங்கா அமைக்கப்பட்ட நாளில் இருந்து இதனை யாரும் சரியாக பராமரிப்பதில்லை. மேலும் பூங்காவிற்குள்ளும், வெளியிலும் குப்பை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
மேற்கு வேளச்சேரி கக்கன் நகரில் பாழடைந்து கிடக்கும் சிறுவர் பூங்கா: மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்
- பாழடைந்த குழந்தைகள் பூங்கா
- மேற்கு வேலேஷேரி
- மேற்கு வேலாச்சேரி பாழடைந்த குழந்தைகள் பூங்கா: நகராட்சி அதிகாரிகள் புறக்கணிப்பு