அமித்ஷா மன்னிப்பு கேட்க முத்தரசன் வலியுறுத்தல்

புதுக்கோட்டை:   புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  மக்களை பல்வேறு பிரச்னைகளிலிருந்து திசை திருப்பவே பாஜக அரசு மொழிப் பிரச்னையை கையில் எடுத்துள்ளது. இந்தி மொழி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து மக்களை பிளவுபடுத்தும் நாசகார வேலையாகும். உடனடியாக அமித்ஷா தனது கருத்தை திரும்ப பெற்று பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Related Stories: