×

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அக்டோபர் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அக்டோபர் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்ட உள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டி.கே.சிவகுமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து திகார் சிறைக்கு டி.கே.சிவகுமார் அழைத்து செல்லப்பட்டார்.  வருமானத்திற்கு அதிகமாக சொத்து  சேர்த்துள்ளதாக வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில்  கடந்தாண்டு ஆகஸ்ட் 7ம் தேதி கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் டெல்லி வீட்டில் சோதனை நடத்தியபோது, கணக்கில்  காட்டாமல் பதுக்கி வைத்திருந்த ரூ.8.59 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
இப்புகார் தொடர்பாக அவரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் டி.கே.சிவக்குமார் வீட்டில் சிக்கிய ரூ.8.50 கோடி குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து வருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார்.

சிவகுமாரிடம் அமலாக்கத்துறை நான்கு நாட்கள் விசாரணை நடத்திய நிலையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டி.கே. சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 ஆம் தேதி கைது செய்தனர். அடுத்த நாள் செப்டம்பர் 4 ஆம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் கூறியது. இதன்பின்னர் கடந்த 10 நாட்கள் காவல் முடிந்ததை அடுத்து, இன்று மீண்டும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமா ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கோரி அமலாக்கப்பிரிவு மனுதாக்கல் செய்தது. அதேபோல டி.கே.சிவகுமார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர், டி.கே. சிவகுமாரின் கோரிக்கைய நிராகரித்தார். அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்றுகொண்ட நீதிபதி, வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கலாம் எனக் கூறினார்.

இன்று ரோஸ் அவென்யூ கோர்ட்டில்நடந்த விசாரணையில் சிவக்குமாரின் நீதிமன்ற காவலை 14 நாட்கள் அதாவது அக்டொபர் 1-ம் தேதி நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிவக்குமார் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக சிவக்குமார் உடல் சோர்வுற்றதால் மருத்துவ சிகிச்சை கோரியதையடுத்து நீதிபதிகள் , டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என சான்று அளித்தால், அவரை முதலில் மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

Tags : Court ,DK Sivakumar ,Karnataka , Karnataka, Former Minister, DK Sivakumar, Court Guard
× RELATED பாஜ அமைச்சர் பிரகலாத் ஜோஷியை...