மதுரை: பொதுமக்களின் கருத்துக்களை பரிசீலித்து திருநெல்வேலி மாவட்டத்தை பிரிக்கும் விவகாரத்தில் அரசு உரிய முடிவு எடுக்கும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. உரிய முறையிலேயே திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. திருநெல்வேலி ஆலங்குளத்தைச் சேர்ந்த பொன்னுதுரை என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடித்து வைத்துள்ளது.