சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக நீதிபதிகளுடன் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், மூத்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, மணிக்குமார், சி.ஐ.எஸ்.எப்.உயரதிகாரி ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேற்று காலிஸ்தான் அமைப்பை சேர்ந்தவர் உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.