சென்னை: சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலத்துடன் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த சேதுராமன் உடலை மின்வாரிய அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றக் கோரி புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கைக்கோரியும் முழக்கமிட்டனர்.