திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை மோட்டார் வாகன அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். போலிசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 43 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மணப்பாறை - குளித்தலை சாலையில் உள்ள மாகாளி பட்டியில் மோட்டார் வாகன பகுதி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் குறித்து பல புகார்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புகாரின் அடிப்படையில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று மாலை 6 மணி அளவில் அலுவலகத்தில் புகுந்து திடீர் என சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேர சோதனைக்கு பின்னர் அங்கிருந்து கணக்கில் வராத பணம் 43 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அலுவலகத்தில் இருந்து ஆவணங்களையும் பறிமுதல் செய்து கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் புறப்பட்டு சென்றனர். மேலும் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலிசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.