சென்னை: தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, பவானி நகரை சேர்ந்த ரவி - கீதா ஆகியோரின் ஒரே மகள் சுபஸ்ரீ (23). இவர் ஸ்கூட்டரில் வந்தபோது அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்து லாரியில் சிக்கி இறந்தார். இந்நிலையில், நேற்று விசிக தலைவர் திருமாவளவன் சுபஸ்ரீயின் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறுகையில், தமிழக அரசு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக இந்த குடும்பத்திற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறினார்.