புதுடெல்லி: தாமும் வர்த்தகர் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் அவர்களின் வேதனையை புரிந்து கொண்டுள்ளதாகவும், அதே சமயத்தில், டெல்லி மாநில அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களால் பொருளாதார மந்தநிலையை பற்றி கவலை கொள்ளவில்லை என்றும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் வர்த்தக மற்றும் தொழில்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: நான் ஒரு வர்த்தகர் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் வேதனை, வலிகள் மற்றும் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டுக்ளளேன். தற்போது வர்த்தகம் “மந்தமாக” உள்ளது. மக்களின் சம்பளம் உயரவில்லை. அதேசமயத்தில் அவர்களின் செலவுகள் அதிகரித்து வருகின்றன. எனினும் அவற்றை உணராத வகையில் டெல்லி மாநில அரசு ஏராளமான ஆதரவை வழங்கியுள்ளது. அதனால் அவர்கள் பொருளாதாரத்தின் மந்தநிலையின் தாக்கத்தை உணரவில்லை.