நாட்டின் நன்மைக்கு, மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு நல்ல ஆட்சி தமிழகத்தில் விரைவில் உருவாகும் வாய்ப்பு வரப்போகிறது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
நாட்டில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் பாஜ அரசு தோல்வி அடைந்துவிட்டது. - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்
இந்த நாடு ஒற்றுமையாக இருக்கிறது. இதற்கு தீங்கு விளைவிக்க பாஜ அரசு முயற்சிக்கக் கூடாது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
இந்திய நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.