பெங்களூரு: புகழ் பெற்ற மைசூர் பாக் இனிப்பு தமிழகத்திற்கு சொந்தமானது என்ற சமூக வலைத்தள புரளியை உண்மை என நம்பி கன்னட அமைப்பினர் கொதித்து போயினர். சமூக வலைதளங்களில் ஒன்றான ட்வீட்டரில் ஆனந்த ரங்கநாதன் என்பவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மைசூர் பாக் இனிப்பு வழங்குவதைப்போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதனுடன் தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட மைசூர் பாக்கிற்கு புவிசார் குறியீடு வழங்கியதற்கு நன்றி என்பது போன்ற ஒரு செய்தியை பதிவிட்டு இருந்தார்.இந்த செய்தி வைரலாக பரவி வந்த நிலையில், கன்னட அமைப்பினர் இந்த விஷயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் சில எலெக்ட்ரானிக் மீடியாக்களிலும் செய்தி வெளியிட்டதுடன் இது தொடர்பாக வாத- விவாதங்கள் தொடங்கினர்.காவிரி நதிநீர் பங்கீடு, எல்லை பிரச்னையில் கர்நாடகாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழகம் எடுத்து வரும் நிலையில், கடந்த நூறாண்டுக்கு முன் குரு ஸ்வீட் மார்க் நிறுவனத்தினரால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இனிப்பை மைசூரு மன்னராக இருந்த நால்வடி கிருஷ்ணராஜ உடையாருக்கு வழங்கியதாகவும், அவர் சாப்பிட்டு மிகவும் சுவையாக உள்ளது.