×

ஏற்காட்டில் பாஜ பிரமுகர் வெட்டிக்கொலை: கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

சேலம்: ஏற்காட்டில் பாஜ பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காடு கீழ்கொளகூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (43), ஏற்காடு ஒன்றிய பாஜ துணைத்தலைவர். இவருக்கு, அத்தை வெள்ளையம்மாளின் மகன் ராமகிருஷ்ணனுடன் சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது. அதுதொடர்பாக நேற்று முன்தினம், ஊர் பஞ்சாயத்து கூடி 1 ஏக்கர் நிலத்தை சின்னராஜிடம் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து கூறினர். இதனால், ஆத்திரம் கொண்ட ராமகிருஷ்ணனின் மகன் மணிவண்ணன், கத்தியால் சின்னராஜை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.

இதுபற்றி ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று மதியம், தனிப்படை போலீசார் மணிவண்ணனை (25) கைது செய்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியது: தங்களது பராமரிப்பில் உள்ள நிலத்தை  சின்னராஜ் உரிமம் கொண்டாடி பிரச்னை செய்ததாகவும், அந்த நிலத்தை ஒப்படைக்கும்படி மிரட்டியதாகவும், ஊர் பஞ்சாயத்திடம் பேசி 1 ஏக்கர் நிலத்தை பெற அனுமதி பெற்றதால் கத்தியால் வெட்டிக்கொன்றதாகவும் வாக்குமூலத்தில் மணிவண்ணன் கூறியுள்ளார்  என்றனர்.

Tags : massacre ,Bajpam Vatican ,Yercaud , Yercaud, Baja Prime Minister, Vettikolai
× RELATED தாய் கண் முன்னே இளைஞர் வெட்டிக்கொலை