பர்கூர் அருகே அரசு பஸ் மீது பைக் மோதியதில் 3 பேர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு பஸ் நேற்று பிற்பகல் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் பர்கூரை அடுத்த மல்லப்பாடி அருேக முச்சாணி மேடு என்ற இடத்தில் சென்றபோது எதிரே ஒரே பைக்கில் 3 வாலிபர்கள்  வந்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில், அரசு பஸ் மீது பைக் மோதியது. இதில் பைக்கில் வந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பர்கூர் போலீசார் விசாரணையில் இறந்தவர்கள் பர்கூரை அடுத்த மல்லப்பாடியைச் சேர்ந்த  சோமேஸ்வரன்(18), பாலிடெக்னிக் மாணவர் சூர்யா(17) என்றும் மற்ெறாருவர் விவரம் தெரியவில்லை.

Related Stories: