×

‘சொன்னா கேட்க மாட்டீயா, அங்கேயே நில்லு’ போதையில் ரயிலை நிறுத்த முயன்றவர் பலி

கோவை: கோவை ரத்தினபுரி செக்கான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (53). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்தார். அதிக போதையில் இருந்த இவர்  ரத்தினபுரி ரயில் பாதையை கடந்து வீட்டிற்கு செல்ல முயன்றார். அந்த நேரத்தில் பெங்களூரில் இருந்து கோவை நோக்கி டபுள் டக்கர் ரயில் வந்து கொண்டிருந்தது. தள்ளாட்டத்துடன் சென்ற ஆறுச்சாமி, ரயில் பாதையில் நின்று கையை ஆட்டி  ரயிலை நிறுத்து முயன்றார்.
  ரயில்வே கேட் கீப்பரும், அவ்வழியாக சென்ற பொதுமக்களும் சத்தம் போட்டு நகர்ந்து போகுமாறு கூறினர். ஆனால் ஆறுச்சாமி தண்டவாளத்தில் ரயிலை நோக்கி கையை ஆட்டி, ‘‘நான் சொன்னா கேட்க மாட்டீயா, அங்கேயே நில்லு,’’  எனக்கூறியபடியே நின்றார். அதிர்ச்சியடைந்த டிரைவர்,  ஹாரன் அடித்து எச்சரித்தார். ஆனால் ஆறுச்சாமி விலகவில்லை, பிரேக் பிடித்தும் வேகமாக வந்த ரயில் ஆறுச்சாமியின் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி அவர் பரிதாபமாக  இறந்தார்.



Tags : tried,stop,train ,intoxicated
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...