இருமொழி கொள்கை ஓபிஎஸ் பேட்டி

திருச்சி: இருமொழிக் கொள்கை மட்டுமே தமிழகத்தின் உயிர்நாடி பிரச்னை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.திருச்சி விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அளித்த பேட்டி: அண்ணாவின் மொழி கொள்கையான இருமொழிக் கொள்கை மட்டுமே தமிழகத்தில் உயிர்நாடி பிரச்னை. எந்த விதத்திலும் தமிழகம் பின்வாங்காது.  ஏற்கனவே 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இருந்ததை மீண்டும் மாணவர்களின் படிப்பு திறமை அதிகமாகும் என்ற நல்ல நோக்கத்தோடு நடைமுறைபடுத்துகிறோம். எனக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும்  சுமூகமான உறவு உள்ளதை யாராலும் பிரிக்க முடியாது. பிரிக்க நினைக்கும் முயற்சியும் நடக்காது. இவ்வாறுஅவர் கூறினார்.

Related Stories: