சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் நக்கீரன் செய்தி வெளியிட்டது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்படி நக்கீரன் கோபாலை கடந்தாண்டு அக்டோபர் 9ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரை விடுவிக்க கோரி வைகோ தலைமையில் ஏராளமானோர் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, வைகோ காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, அப்புறப்படுத்த முயன்ற போலீசாருக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது என இந்திய தண்டனை சட்டம் 190, 353, 290 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.