10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய திருத்தப்பட்ட அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. 2019-2020-வது கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப்பாடங்களில் தலா இரு தாள்களாக தேர்வெழுதும் நடைமுறையை ஒரே தாளாக மாற்றி கடந்த 13-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. மொழித்தாள் 1, மொழித்தாள் 2, ஆங்கிலம் முதல் தாள், இரண்டாம் தாள் என இருந்த பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டே தாள்களாக தேர்வு நடத்தப்படவுள்ளது.
அதன்படி,
மார்ச் 27 மற்றும் 31-ம் தேதிகளில் மொழிப்பாடத் தேர்வுகள்.
மார்ச் 28 விருப்ப மொழிப் பாடத்திற்கான தேர்வு.ஏப்ரல் 3 - சமூக அறிவியல் தேர்வு,ஏப்ரல் 7 - அறிவியல் தேர்வுஏப்ரல் 13 - கணிதத் தேர்வு.