சென்னை: பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மகளிருக்கு உதவ, உதவி மையங்கள் அமைப்பது குறித்து அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கவுன்சிலிங் மையங்கள் அமைக்க கோரி கிருஷ்ணபிரியா பவுண்டேஷன் வழக்கு தொடர்ந்திருந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாவட்டம் தோறும் கவுன்சிலிங் மையங்கள் அமைக்க உத்தரவிட்டிருந்தது. வழக்கு மீண்டும் இன்று ஐகோர்ட் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உதவி மையங்கள் அமைக்க தேவைப்படும் கால அவகாசம் குறித்து அறிக்கை தர உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.