செஞ்சி அருகே விவசாயி மின்வேலியில் சிக்கி உயிரிழந்த வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

விழுப்புரம்: செஞ்சி அருகே விவசாயி மின்வேலியில் சிக்கி உயிரிழந்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டூரை சேர்ந்த விவசாயி மணி கடந்த 2014ம் ஆண்டு மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார். அனுமதி இல்லாமல் மின்வேலி அமைத்த ராஜேந்திரன், ஜெயக்குமார் ஆகிய  2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து உயிரிழந்த விவசாயி மணியின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: