திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 15 சவரன் நகை, 14 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளது. குன்னத்தை சேர்ந்த அரிசி வியாபாரி பழனி என்பவரின் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் பின்கதவை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.