சென்னை: பெப்சி அமைப்பிற்கு முதற்கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே செல்லமணியிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார். பையனூரில் அமைக்கப்பட்டுள்ள அம்மா அரங்கத்திற்கு ரூ.5 கோடி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.