சென்னை: மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவை கொண்டாட பள்ளிகளில் காலாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை பள்ளி நிகழ்ச்சிகள் நடத்த அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்து மாநில திட்ட இயக்கத்துக்கு அனுப்ப வேண்டும் என கல்வித்துறை அலுவலர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.