சென்னை. மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினிபஸ் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் ஷேர் டாக்சி மற்றும் ஷேர் ஆட்டோ சேவை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த மாதம் சென்ட்ரல், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு, டி.எம்.எஸ், நந்தனம் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மினிபஸ் சேவை தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் 6 முதல் 8 கி.மீ தூரம் வரை இந்த சேவை தற்போது செயல்பட்டு வருகிறது. இதற்காக 10 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில், பயணிகளின் வசதிக்காக சேவையை விரிவுபடுத்தும் நோக்குடன் கூடுதலாக 20 மினி பஸ் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.