துரைப்பாக்கம்: கடலில் குளித்த கல்லூரி மாணவன் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். மற்றொருவர் மாயமானார். அவரை தேடி வருகின்றனர். தரமணியை சேர்ந்தவர் ஜெகன் (19). இவர், துரைப்பாக்கதில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம். படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (19). பள்ளிக்ககரணையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.இ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் இவர்கள் இருவரும் தனது நண்பர்கள் மூன்று பேருடன் பைக்கில் கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் கடற்கரைக்கு சென்றனர். பின்னர் இவர்கள் கடலில் குளித்துள்ளனர். அப்போது ராட்சத அலையில் ஜெகன், ஆகாஷ் இருவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.