×

ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் பலி

துரைப்பாக்கம்: கடலில் குளித்த கல்லூரி மாணவன் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். மற்றொருவர் மாயமானார். அவரை தேடி வருகின்றனர்.  தரமணியை சேர்ந்தவர் ஜெகன் (19). இவர்,  துரைப்பாக்கதில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம். படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (19). பள்ளிக்ககரணையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.இ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் இவர்கள் இருவரும் தனது நண்பர்கள் மூன்று பேருடன் பைக்கில் கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் கடற்கரைக்கு சென்றனர். பின்னர் இவர்கள் கடலில் குளித்துள்ளனர். அப்போது ராட்சத அலையில் ஜெகன், ஆகாஷ் இருவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

இதை பார்த்து அவர்களது நண்பர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த மீனவர்கள் இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஜெகனை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே ஜெகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த நீலாங்கரை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மீனவர்கள் உதவியுடன் ஆகாஷை தேடி வருகின்றனர்.

Tags : College student , Giant wave, stuck, college student, kills
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது