சென்னை: புழல், காவாங்கரை, கதிர்வேடு, ரெட்டேரி, லட்சுமிபுரம், மாதவரம், சூரப்பட்டு, புத்தகரம், சண்முகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடை, ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகளின் கழிவுகள் புழல் அடுத்த காவாங்கரை தண்டல் கழனி, ஜிஎன்டி சாலை சர்வீஸ் சாலையில் கொட்டப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். அவ்வப்ேபாது, இந்த குப்பை கழிவை மர்ம ஆசாமிகள் தீ வைத்து எரிப்பதால் ஜி.என்.டி. சாலை மற்றும் சர்வீஸ் சாலை புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், மாநில நெடுஞ்சாலை துறையில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘இந்த சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க வரி வசூல் செய்யும் தனியார் நிறுவனத்தினர் சாலையோரம்
குப்பை கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். குப்பை இல்லாத தேசிய நெடுஞ்சாலையாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேசிய நெடுஞ்சாலை துறையினரும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.பல்லாவரம்: பல்லாவரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. சமீப காலமாக நகராட்சியில் உள்ள தெருக்களில், நகராட்சி நிர்வாகம் முறையாக குப்பை தொட்டிகளை வைப்பது இல்லை. இதனால், சாலைகளில் குப்பை கொட்டப்படுகிறது.