திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள ஓட்டலில் இருந்து மாயமானவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்து இருக்கிறது. இதையடுத்து அவர்களை தேடும் பணியில் உளவுத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் கொல்லம் அருகே குண்டரா பகுதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வெளிநாட்டு தம்பதி காரில் வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று சோப்பு வாங்கினர். ₹2,000க்கு சில்லரை வேண்டும் என்று கடை உரிமையாளரிடம் கேட்டு உள்ளனர். கடை உரிமையாளரும் தனது பேக்கில் இருந்து சில்லரை எடுத்து ெகாண்டிருந்தார். அப்போது திடீரென அந்த வெளிநாட்டு தம்பதி பேக்கை
பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளிநாட்டு தம்பதியை விரட்டி பிடித்து ேபாலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் அந்த தம்பதியிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஆமீர் (27), அவரது மனைவி நஸ்ரின் (20) என்பது தெரியவந்தது. இவர்கள் இதேபோல பல இடங்களில் பலரிடம் இருந்து பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு இருவரையும் போலீசார் கொட்டாரக்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். விசாரணையின்போது இவர்களுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்த பெஹ்னாஸ் (32), மரியம் மெகபூபி (36), மோர்டெசா (47), காலித் மெகபூபி (54) மற்றும் 13 வயதான சிறுமி ஆகிய 5 பேர் வந்தது என்பது தெரியவந்தது. அவர்கள் கொல்லத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்துள்ளனர்.