மதுரை அருகே வாலிபர் மீது ஆசிட் வீச்சு

திருமங்கலம்: மதுரையில் இருந்து திருமங்கலம் செல்லும் ரிங்ரோட்டில் தூத்துக்குடி பிரிவு 4 வழிச்சாலை அருகே புதிதாக டோல்கேட் அமைக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை இந்த டோல்கேட் வழியாக வாலிபர் ஒருவர் டூவீலரில் வந்துள்ளார். அப்போது எதிரே மற்றொரு டூவீலரில் வந்த இரு வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில், எதிரே டூவீலரில் வந்த வாலிபர் முகத்தில் ஆசிட் ஊற்றி விட்டு பறந்து விட்டனர். இதில் அலறி துடித்த வாலிபரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். விசாரணையில் ஆசீட் வீச்சுக்கு உள்ளா னவர் அனுப்பானடியை சேர்ந்த செந்தில் என்பதும், இவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்ததுள்ளது.

Related Stories: