சேலம்: வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடு முழுவதும் உள்ள வங்கி அதிகாரிகள், வரும் 26, 27ம் தேதி ஆகிய இரு நாட்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். அகில இந்திய யூனியன் வங்கி அதிகாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் சேலத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராமபுத்திரன் தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச் செயலாளர் நாகராஜன், பொருளாளர் ஜவகர் ஆகியோர், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். பின்னர் பொதுச் செயலாளர் நாகராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது: வங்கி அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு, வேலை நேரத்தை முறைப்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாடிக்கையாளர்களுக்கான சேவை வரிகளை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.