செந்தில்பாலாஜி, ஜோதிமணி உட்பட 105 பேர் மீது வழக்கு

க.பரமத்தி: அமராவதி அணையில் கரூர் மாவட்ட கடைமடை வரை தண்ணீர் திறக்க வலியுறுத்தி திமுக சார்பில் சின்னதாராபுரம் பஸ் நிலையம் அருகே நேற்றுமுன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அனுமதியின்றி ஆட்களை கூட்டமாக அழைத்து வந்து போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி, எம்.பி. ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட 105 பேர் மீது சின்னதாராபுரம் போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.

Related Stories: