சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் சிவகாசி, திருவில்லிபுத்தூர், மாரனேரி உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ஆலைக்கு சொந்தமான வேன், சிவகாசி பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 16 பேரை ஏற்றிக்கொண்டு பட்டாசு ஆலைக்கு சென்றது. தாயில்பட்டி சாலையில் சுப்பிரமணியாபுரம் விலக்கு அருகே, பஸ்சை முந்த முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.