×

ராயபுரம் ஸ்டான்லி நகரில் பயன்பாட்டுக்கு திறக்காமல் பாழாகும் சமுதாயக் கூடம்: அதிகாரிகள் மெத்தனம்

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி, ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட ஸ்டான்லி நகர், நாகப்பன் நகர், சி.பி.ரோடு, ெகனால் தெரு, மூலக்கொத்தளம் உள்ளிட்ட பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி இளைஞர்களின் வசதிக்காக ஸ்டான்லி நகர், 5வது தெருவில் கடந்த திமுக ஆட்சியில் உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது. இதை ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அதிமுகவினர் இந்த உடற்பயிற்சி கூடத்தை, பல லட்சம் செலவில் சமுதாய நலக்கூடமாக மாற்றினர். ஆனால், 8 ஆண்டுகளை கடந்தும் இதுவரை இந்த சமுதாய நலக்கூடம் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் பூட்டியே கிடக்கிறது.

இதனால், இப்பகுதி மக்கள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளை அதிக செலவு செய்து தனியார் திருமண மண்டபங்களில் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பூட்டிக் கிடக்கும் சமுதாய நலக்கூடத்தை திறக்க வேண்டும், என மாநகராட்சி அதிகாரிகளுக்கும், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஜெயக்குமாரிடமும் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.மேலும், மேற்கண்ட கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாததால் பாழடைந்து வருகிறது. உடற்பயிற்சி கூடத்தை சமுதாய நலக்கூடமாக மாற்றுவதற்கு பல லட்சம் செலவு செய்த அதிகாரிகள், அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பூட்டிக் கிடக்கும் சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Tags : community hall ,Raipuram Stanley , Ruin, community hall, officials, melancholy
× RELATED இலவச சர்க்கரைநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்