லாகூர்: பாம்பு, முதலை ஆகியவற்றை கடிக்க வைத்து கொல்ல போவதாக பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பாடகி டிவிட்டரில் விடுத்துள்ள மறைமுக கொலை மிரட்டல் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, லாகூர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த பாடகி ரபி பிர்சடா. இவர் தனது வீட்டில் பாம்புகள், முதலை நடுவில் பாம்பு ஒன்றை கையில் பிடித்தவாறு அமர்ந்தபடி, ``நான் ஒரு காஷ்மீர் பெண். பாம்பு, முதலையுடன் இந்தியாவுக்கு வர தயாராக இருக்கிறேன். அவற்றை உங்களுக்கு பரிசாக அளிக்க உள்ளேன். காஷ்மீர் மக்களை நீங்கள் மிகவும் துன்புறுத்துகிறீர்கள். உங்களுக்காக என்ன கொண்டு வரப் போகிறேன் என்று பாருங்கள். என்னுடைய இந்த நண்பர்கள் உங்களுக்கு விருந்து அளிக்க போகிறார்கள். சாவதற்கு தயாராக இருங்கள்.