சென்னை: கால நிலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றால் மரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என சென்னையில் ஈஷா அறக்கட்டளை நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். இந்தியாவிற்கே வழிகாட்டியாக மரங்களை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஜத்குரு ஜாக்கிவாசுதேவின் 242 கோடி மரங்கள் நடும் திட்டத்திற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் கூறியுள்ளார்.