சென்னை: சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த வழக்கில் அதிமுக பிரமுகரின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. பேனர் வைத்தவர் பெயரை வழக்கில் ஏன் சேர்க்கவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. தனது வீட்டு திருமணத்திற்காக பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெய்கோபால் பெயர் சேர்க்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெய்கோபால் நெஞ்சுவலி காரணமாக பள்ளிக்கரணை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.