சென்னை: கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த ஹேமலதா (44), தனது கணவர் முருகனுடன் நேற்று மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க வந்துள்ளார். உழைப்பாளர் சிலை பின்புறம் உள்ள கடை அருகே இவர்கள் அமர்ந்து சமோசா வாங்கி சாப்பிட்டனர். அப்போது, இரண்டரை மாத ஆண் குழந்தையுடன் அங்கு வந்த 21 வயது மதிக்கத்தக்க பெண், ‘‘கழிவறைக்கு செல்கிறேன். அதுவரை எனது குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள். உடனே வந்து விடுகிறேன்,’’ என்று கூறினார். இதையடுத்து, ஹேமலதா அந்த குழந்தையை பெற்றுக்கொண்டார்.