சென்னை: வருமான வரித்துறை மனமகிழ் மன்றம் சார்பில் நடைபெறும் முதலாவது மாநில அளவிலான ஹாக்கிப் போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணி தகுதி பெற்றது. எழும்பூர் ஹாக்கி அரங்கில் நேற்று நடைபெற்ற கால் இறுதியில், தமிழ்நாடு காவல்துறை - தமிழ்நாடு ஹாக்கி யுனிட் அணிகள் மோதின. இப்போட்டியில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் 4-3 என்ற கோல் கணக்கில் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. அந்த அணியின் ஹர்மன் பிரீத்சிங் 3 கோல், வினோதன் ஒரு கோல் அடித்தனர். தமிழ்நாடு காவல்துறை சார்பில் திருமுருகன், ரகு தலா ஒரு கோல் அடித்தனர்.