கள்ளக்காதலி வீட்டில் உல்லாசமாக இருந்த கணவர்: கையும் களவுமாக பிடித்த மனைவி: அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்

ஹைட்ராபாத்: கள்ளக்காதலி வீட்டில் உல்லாசமாக இருந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி அவரை சரமாரியாக அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருக்கிறார். தெலுங்கானா மாநிலம் ஹைட்ராபாத்தை சேர்ந்த கோபால் என்பவருக்கு எஸ்தர் ஏஞ்சல் என்பவருடன் திருமணம் நடந்து 2 பிள்ளைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். சந்தேகம் அடைந்த ஏஞ்சல், கணவன் கள்ளிக்காதலி வீட்டுக்கு செல்லும்போது கையும் களவுமாக பிடித்து சரமாரியாக தாக்கினார். ஹைட்ராபாத் அல்வால் சுபாஷ் நகரில் கோபால் கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது. உறவினர்களுடன் சென்ற ஏஞ்சல் அவரை நடுரோட்டில் இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

Related Stories: