நிர்வாண போஸ் கொடுக்கச்சொல்லி மிரட்டல் கல்லூரி பஸ் டிரைவர் உள்பட 2 பேர் மீது 8 பிரிவில் வழக்கு

ஆத்தூர்: ஆத்தூரில், கூட்டுப்பலாத்காரத்தால் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற வழக்கில், கல்லூரி பஸ் டிரைவர் உள்பட 2பேர் மீது 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.  இவர்,கல்லூரி பஸ்சில் சென்று வந்தபோது ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்தார். இதனை நோட்டமிட்ட அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 5 பேர், மாணவி தனது காதலனுடன் தனிமையில் இருந்ததை ரகசியமாக படம் பிடித்து, அதை மாணவியிடம் காண்பித்து மிரட்டி,கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தங்களது ஆசைக்கு அவ்வப்போது இணங்க வேண்டுமென மிரட்டல் விடுத்து வந்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, நேற்று முன்தினம் சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இதன்பின் வீட்டுக்கு சென்று தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள், அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, அவரின்  வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட அம்மம்பாளையம் பகுதியை சேர்ந்த நெல் அறுவடை இயந்திர டிரைவர் வரதராஜன்(27) மற்றும் அவரது நண்பர் கல்லூரி பஸ் டிரைவர் விஜயகுமார்(30) ஆகியோர் மீது 8 பிரிவின்கீழ் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  தலைமறைவானவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: