தேஜாஸ் ரயிலில் 25 லட்சம் காப்பீடு

புதுடெல்லி: தேஜாஸ் ரயில் பயணிகளுக்கு ₹25 லட்சம் பயண காப்பீடு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி மூலம் முதன் முதலாக டெல்லி - லக்னோ இடையே அடுத்த மாதம் இயக்கப்பட உள்ள தேஜாஸ் ரயிலில் இந்த  சலுகை கிடைக்கும். இதுதவிர, தேவைப்பட்டால் லக்கேஜ்களை வீட்டில் இருந்து எடுத்து வரவும், ரயில் நிலைய தங்கும் இடத்துக்கும் குறிப்பிட்ட தொகை பயணிகளிடம் வசூலிக்கப்படும். பரிசோதனை முயற்சியாக இந்த திட்டம் நடைமுறைப்  படுத்தப்பட உள்ளது. இதன்பிறகு சில ரயில்களில் தனியார் சேவைகள் அறிமுகம் செய்யப்படலாம் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: