டெல்லி: ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியதை எதிர்த்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் கபில்சிபில் திரும்ப பெற்றார். நீதிமன்ற காவலை எதிர்த்து தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார் ப.சிதம்பரம். ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 23ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதிமன்ற காவலுக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.