சென்னை: நெசப்பாக்கத்தில், 6 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த முதியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 2017ம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அதே தெருவில் வசித்து வரும் மாரிமுத்து (60) என்பவர் சிறுமியை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி தனது தாயிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதியவரை கைது செய்தனர்.